உணவு நெருக்கடியை தீர்க்க அதிகமான பயிர்ச்செய்கையை மேற்கொள்ள தீர்மானம்!

Mayoorikka
2 years ago
உணவு நெருக்கடியை தீர்க்க  அதிகமான பயிர்ச்செய்கையை மேற்கொள்ள தீர்மானம்!

இந்த வருடம் 80 வீதத்திற்கும் அதிகமான பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இம்முறை பயிர்ச்செய்கை இலக்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் டி.அபேசிறிவர்தன தெரிவித்தார்.