கொழும்பில் டயர் எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Mayoorikka
2 years ago
கொழும்பில் டயர் எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு – புதுக்கடை பகுதியில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமக்கு எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து நடு வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

 
25 நாட்களாக எரிவாயு வரவில்லை. மண்ணெண்ணெயும் இல்லை. நாங்கள் என்ன செய்வது. உடனடியாக எங்களுக்கு தீர்வு வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.