கோ கிராமங்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது

#SriLanka #Attack
கோ கிராமங்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது

கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹங்வெல்ல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் தெஹிவளை மாநகர சபை உறுப்பினருமான

ஹங்வெல்ல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

53 வயதான இவர் ஹங்வெல்ல, தும்மோதர பிரதேசத்தை சேர்ந்தவர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொல்கஹவெல பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

59 வயதான சந்தேக நபர் இரத்மலானை புகையிரத நிலைய வீதி பகுதியில் வசிப்பவராவார்.

சந்தேக நபர் மற்றும் சந்தேக நபர் நாளை (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.