இன்றைய வேத வசனம் 20.05.2022: அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்;

Prathees
4 years ago
இன்றைய வேத வசனம் 20.05.2022: அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்;

அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள். 1 கொரிந்தியர் 16:18

சைமன் வீட்டிற்கு போனதை என்னால் மறக்கமுடியாது. கென்யாவிலுள்ள நியாஹூருருவின் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் நீலவானின் கீழிருந்த அவனுடைய எளிமையான வீட்டிற்குச் சென்றோம். அழுக்கான தரையும், விளக்கு வெளிச்சமும் அவன் ஏழ்மையை பிரதிபலித்தன.

என்ன சாப்பாடு என்பதையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. ஆனால், எங்களை விருந்தாளிகளாய் வரவேற்ற சைமனின் முகத்திலிருந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கமுடியாது. அவனுடைய சுயநலமில்லா, மனதைத் தொட்டு, புத்துணர்வாக்கும் அந்த விருந்தோம்பல், இயேசுவையே எங்களுக்கு ஞாபகப்படுத்தியது. 

1 கொரிந்தியர் 16:15-18ல், பவுல் அப்போஸ்தலன் பரிசுத்தவான்களைப் பராமரிக்கும் ஸ்தேவானுடைய குடும்பத்தைக் குறித்துக் கூறுகிறார் (வச.15). அவர்கள் “பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்று” (வச.15) குறிப்பிடுகிறார். அவர்கள் பொருள் உதவிகளை அவருக்கு செய்திருந்தாலும் (வச.17), “அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்” (வச.18) என்றதின் தாக்கத்தை பவுல் விவரிக்கிறார்.. 

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுகிற வாய்ப்புகள் கிட்டும்போது ஆகாரம், தங்குமிடம் ஆகியவற்றிற்கு சூழலுக்கேற்ப முக்கியத்துவம் தருகிறோம். நல்லது. என்றாலும், அவை அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது.

மறக்கமுடியாத விருந்தோம்பல் மிகவும் முக்கியமான ஒன்று என்றாலும், ஒருவரை முழுவதுமாய் போஷிக்க மற்றும் உற்சாகப்படுத்த உணவோ, பொருட்களோ போதுமானதல்ல. மெய்யான உற்சாகம் என்பது இருதயத்திலிருந்து வழிந்தோடும் தெய்வீகத்திற்குரியது.

அது மற்றவர்களுடைய இருதயத்தை சென்றடைகிறது. சாப்பிட்டு பல காலங்கள் கடந்த பின்பும் அது ஆத்துமாவை போஷித்துக்கொண்டேயிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4