அரசாங்கத்துடன் இணைந்த SJB உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Mayoorikka
2 years ago
அரசாங்கத்துடன் இணைந்த SJB உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைவது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.