எம்.பி.க்கள் வீடுகளுக்கு ட்ரோன் கமரா மூலம் தீ வைத்தனர்: தினேஷ்

Prathees
2 years ago
எம்.பி.க்கள் வீடுகளுக்கு ட்ரோன் கமரா மூலம் தீ வைத்தனர்:  தினேஷ்

கடந்த 9ஆம் திகதி இரவு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைப்பதற்கான தகவல்கள் ட்ரோன் கமெராக்கள் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவை வெளியாட்களால் செய்யப்படுவதாகவும், கிராம மக்கள் அல்ல என்றும் கூறிய அவர், வீடுகளுக்கு செல்லும் வழிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ட்ரோன் கேமராக்கள் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றை கண்டுபிடிக்க நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்றும் கூறினார்.

இவைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஜனநாயக பாராளுமன்ற முறைமை அழிந்து அராஜக நாடு உருவாகும் என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.