5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பொலிஸ்மா அதிபர்

Prathees
2 years ago
5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பொலிஸ்மா அதிபர்

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதை அடுத்து அவர் வௌியோறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் இவ்வாறு முன்னிலையாகியிருந்தார்.