எதிர்வரும் வாரத்தின் முற்பகுதியில் இருந்து தடையின்றி மின் விநியோகம் வழங்க நடவடிக்கை - வலுசக்தி அமைச்சர்

Reha
2 years ago
எதிர்வரும் வாரத்தின் முற்பகுதியில் இருந்து தடையின்றி மின் விநியோகம் வழங்க நடவடிக்கை - வலுசக்தி அமைச்சர்

எதிர்வரும் வாரத்தின் முற்பகுதியில் இருந்து தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நுரைசோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இன்று முதல் இணைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நாட்டின் மின்சார தேவையினை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்வி பொது தாராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கருத்திற்கொண்டு இன்று மின் துண்டிப்பை அமுல்படுத்தாதிருப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.