மருத்துவமனைகளில் சிசேரியன் தைக்க நூல் கூட இல்லை

Prathees
2 years ago
மருத்துவமனைகளில் சிசேரியன் தைக்க நூல் கூட இல்லை

இலங்கை வைத்தியசாலைகளில் இன்று கடுமையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (ஊவுருயு) தெரிவித்துள்ளது.

சில வைத்தியசாலைகளில் சிசேரியன் செய்வதற்கு தேவையான தையல் பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு நிலவுவதாக அதன் செயலாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவிக்கின்றார்.

மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இதுபோன்ற பல பொருட்களை சந்தையில் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றன என்றும் அவர் கூறினார்.

இன்று நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகள் நோயாளிகள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் நோயாளர் பராமரிப்பு சேவைகளை நடத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.