மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருள் பெறுவதை தவிர்க்கவும்: காஞ்சனா விஜேசேகர

Mayoorikka
2 years ago
மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருள் பெறுவதை தவிர்க்கவும்: காஞ்சனா விஜேசேகர

எரிபொருள் சேகரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மற்ற திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பது தொடர்பான பல குற்றச்சாட்டுக்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும், அவற்றை அதிகாரிகளிடம் ஊக்கப்படுத்த வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.