சந்தேக நபரான பெண்ணை கைது செய்ய பொலிஸார் உதவி கோரல்

#SriLanka #Police #Women
சந்தேக நபரான பெண்ணை கைது செய்ய பொலிஸார் உதவி கோரல்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு அதனை சேதப்படுத்தியமை தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரான பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

திவுலப்பிட்டி பொலிஸ் பிரிவில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது குறித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, தீ வைத்தமை குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்களை மூலம் குறித்த அலுவலகத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் இவர் பிரதானமாக செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த பெண் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே அவரை இனங்காண்பதற்கு பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. 

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8594949 மற்றும் 071-4196609 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.