பொதுமக்களிடம் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்

Prathees
2 years ago
பொதுமக்களிடம் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்

12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் நாளையதினம் (24) விநியோகம் செய்யப்படாது என்றும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 7,500 மெற்றிக் தொன் திரவ எரிவாயு தொகுதி அடங்கிய கப்பல்கள் இரண்டுக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

3,500 மெற்றிக் தொன் எரிவாயுயைக் கொண்ட கப்பல் வியாழக்கிழமை கொழும்பு வந்தடையும் என்றும் அவர் தெரிவித்தார்.