புதிய வரவு செலவுத் திட்டம் மீதான விசேட விவாதம் பிரதமர் தலைமையில்

Prathees
2 years ago
புதிய வரவு செலவுத் திட்டம் மீதான விசேட விவாதம் பிரதமர் தலைமையில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வர்த்தக சம்மேளனம், திறைசேரி மற்றும் பொருளாதார ஆலோசகர்களை சந்தித்து எதிர்கால வரவு செலவு திட்டம் மற்றும் பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ​​மூலதனச் செலவினங்களை பெருமளவு குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சேமித்து வைக்கப்படும் பணம் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

உக்ரைன் யுத்தத்துடன் உள்ளூர் சந்தையின் தவறான நிர்வாகத்தினால் நாடு உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த உணவுப் பற்றாக்குறை இலங்கையை மாத்திரமன்றி உலகச் சந்தையையும் பாதிக்கின்றது.

உணவுப் பற்றாக்குறையின் தாக்கத்தை குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.