நிதி அமைச்சின் முடிவுகளை ஜனாதிபதியும் ரணிலுமே எடுப்பார்கள்! காஞ்சன விஜேசேகர

Mayoorikka
2 years ago
நிதி அமைச்சின் முடிவுகளை ஜனாதிபதியும் ரணிலுமே எடுப்பார்கள்! காஞ்சன விஜேசேகர

புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எடுப்பர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.