பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் இராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம்

#SriLanka #Sri Lanka President
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் இராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம்

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மே 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.