விலைவாசி உயர்ந்தாலும் நஷ்டம் தொடர்கிறது - எரிசக்தி அமைச்சர்

#SriLanka #Power #prices
விலைவாசி உயர்ந்தாலும் நஷ்டம் தொடர்கிறது - எரிசக்தி அமைச்சர்

விலையேற்றத்தின் பின்னரும் எரிபொருள் விற்பனையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டமடைந்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாயும், டீசலுக்கு 60 காசுகளும் நஷ்டம் என்று அவர் மேலும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.