நாளைய தினமும் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது: சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்படலாம்
Mayoorikka
2 years ago
நாளைய தினமும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலை உயர்வால் பஸ் கட்டணம், ஓட்டோ கட்டணம் மற்றும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.