சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக உள்ளிட்ட 6 பேருக்கு மீளவும் விளக்கமறியல்!

Reha
2 years ago
சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக உள்ளிட்ட 6 பேருக்கு மீளவும் விளக்கமறியல்!

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயத்திலக்க உள்ளிட்ட 6 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.