2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும்!

Mayoorikka
2 years ago
 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும்!

சிறு போகத்திற்கு தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2 வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது நெற்செய்கையை செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களை பயிரிடுமாறு அவர் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.