அரசாங்க செலவினங்களில் 250 பில்லியன் ருபாயை குறைக்க நடவடிக்கை
Prathees
2 years ago
சுமார் 250 பில்லியன் ருபாய் அரசாங்க செலவினங்களைக் குறைக்கக்கூடிய வழிகளை திறைசேரி அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போதைய அரச வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக புதிய இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது
குறிப்பாக அரசாங்க மூலதனச் செலவுக் குறைப்புக்கள் மூலம் இந்தச் செலவினங்களைக் குறைக்க திறைசேரி நம்புகிறது.
அதன்படிஇ பல்வேறு துறைகளில் இருந்து மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தை சேமித்துஇ மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் செலவுக் குறைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் வரி வருவாயை அதிகரிக்கவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.