20 ஆவது திருத்தம் வந்தால் சிறப்பாக செய்வோம் என கூறிய அரசாங்கம் இன்று மௌனமாக இருக்கிறது! சஜித்
Mayoorikka
2 years ago
சிறப்பாக செய்வோம் என்பதற்காகவே 20 ஆவது திருத்ததை அரசங்கம் கொண்டு வரட்டும் என இடமளித்தவர்கள், இன்று நிலைமாறி அனைத்து கட்சிகளும் 21 ஆவது திருத்தத்தைக் கொண்டு வர அழைப்பு விடுக்கின்றன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கம் எந்தளவுக்கு சிறப்பாக செயற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் நன்றாகவே புலப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேசிய கட்டுமான சங்கத்தின் அதிகாரிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.