சஷி வீரவன்ச பிணையில் விடுதலை
Prathees
2 years ago
முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.
போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்த குற்றச்சாட்டின் கீழ், 2 வருடகால சிறைத்தண்டனை பெற்றிருந்த அவர், நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீடு செய்திருந்தார்.