இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பாரிய சிக்கல்: எச்சரித்த பேராசிரியர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் வரித் திருத்தங்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்தேச வற் மற்றும் தொலைத்தொடர்பு வரியானது குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரிச்சுமையை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறைந்த வருமானம் பெறுபவர்கள் வருமான சதவீதத்திற்கு ஏற்ப அதிக வரிச் சுமையை செலுத்த வேண்டியிருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனைய வரிகள் போல் அல்லாமல் இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை கொண்டவர்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இதன் மூலம் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பானது நெருக்கடியில் உள்ள மக்களுக்கு வாழ்வது என்பதன் விடயம் மேலும் கடினமாக்கும்.
எனினும் தற்போதுள்ள சில பிரச்சினைகளுக்கு இந்த வரி அதிகரிப்பு சாதகமான விளைவை ஏற்படுத்தும் என கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.