துமிந்த சில்வா சற்றுமுன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கைது
Kanimoli
2 years ago
துமிந்த சில்வா திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்றுமுன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட அரச தலைவரின் பொது மன்னிப்பை இடைநிறுத்தி இலங்கை உயர் நீதிமன்றம் நேற்று (31) இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன்படி துமிந்த சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.