எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்: ஜனாதிபதி

Mayoorikka
2 years ago
எரிபொருள்  விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்: ஜனாதிபதி

பயணிகளை கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
 
எரிபொருள்  விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே சமயம், பொதுப் போக்குவரத்துக்கு அதிக தேவை இருப்பதால், அதை எளிதாக்குவதன் மூலம் மக்கள் நிம்மதி அடைவார்கள் என்றார்.

கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் (09) இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ரயில்கள் மற்றும் பேருந்துகளுக்கு முறையாக எரிபொருள் விநியோகத்தின் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு இரவு வேளைகளில் எரிபொருள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பார்க் & டிரைவ் அமைப்பை விரிவுபடுத்தவும், பார்க்கிங் கட்டணத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

SLTB மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள நேர அட்டவணையை குறுகிய பயணங்களுக்கு பயன்படுத்தவும் முன்மொழியப்பட்டது. அலுவலக சேவைகளை இலக்காகக் கொண்டு புதிய ரயில் சேவைகளை தொடங்கவும் தற்போது இயக்கப்படும் ரயில்களுக்கான பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் காணப்பட்டதுடன், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

ரயில்வே துறைக்கு சொந்தமான ஒதுக்கப்பட்ட நிலங்களை ஓராண்டுக்கு உணவுப் பயிர்களுக்கு குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த காணிகளை மிகக்குறைந்த வரிவிகிதத்தில் விவசாய சங்கங்களுக்கு வழங்க பிரதேச செயலகங்கள் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பேமசிறி, லைன் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!