உரும்பிராயில் உள்ள வீடொன்றில் இணுவிலை சேர்ந்த இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு
Kanimoli
2 years ago

உரும்பிராயில் உள்ள வீடொன்றில் இணுவிலை சேர்ந்த இளைஞன் நேற்று முன்தினம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் போதைவஸ்துப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர் எனவும் அளவுக்கு அதிகமாக போதை ஊசி ஏற்றிய நிலையில் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனினும் குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிவராத நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



