அகழியில் இனம் தெரியாத நபரின் சடலம்
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்கு பின் பகுதியில் உள்ள அகழியில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது.
முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



