பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் உயிரிழப்பு

#Pakistan #GunShoot #Death
Prasu
4 years ago
பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் நடப்பு ஆண்டில் மட்டும் 8 சிறார்கள் போலியோவால் பாதிக்கப்பட்டனர். 

இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் நாடு முழுவதும் போலியோ தடுப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியது. இதன்படி, வீடு வீடாக போலியோ தடுப்பு மருந்து போட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின மாவட்டத்தில் போலியோ தடுப்புக் குழு மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த தாக்குதலில் 2 போலீசார் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு கைபர் - பக்துன்க்வா மாகாண முதல் மந்திரி மெகமூத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4