இலங்கையிலுள்ள பல வங்கிகள் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

Kanimoli
2 years ago
 இலங்கையிலுள்ள பல வங்கிகள் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வர்த்தக வங்கிக் கிளைகள் பரிவர்த்தனைகளுக்காக திறக்கும் நேரத்தை மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக துறைமுகம், சுகாதாரம், அத்தியவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருளை விநியோகிக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

அத்துடன் ஏனைய அனைத்து துறையினரும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதன் மூலம் இந்த எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இல்லையெனில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள எரிபொருளை பங்கீடு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும்.

இந்த நிலையிலேயே எதிர்வரும் 10ஆம் திகதிவரை அத்தியவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏனைய செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

அத்துடன் இதற்காக ஏனைய துறையினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எங்களுக்கு பொருந்தாது, அனைத்து வாகனங்களுக்கும் பற்றுச்சீட்டு முறை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி தெரிவித்திருந்தது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலேயே வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பில் பல வங்கிகள் அறிவிப்புக்களை விடுத்துள்ளன.

அதன்படி நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வர்த்தக வங்கிக் கிளைகள் பரிவர்த்தனைகளுக்கான திறக்கும் நேரத்தை மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை முடிந்தளவு இணையவழியில் வங்கி பரிவர்த்தனை (Digital or Internet Banking) நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!