நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்குக் காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச - பாட்டலி சம்பிக்க ரணவக்க

Kanimoli
2 years ago
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்குக் காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச -  பாட்டலி சம்பிக்க ரணவக்க

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்குக் காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் இப்போதே வீட்டுக்குச் செல்ல வேண்டும் என 43ஆவது படைப் பிரிவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (29) தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை மற்றும் ராஜபக்சவும் அவர்களின் அடியாட்களும் ஆட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வரை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இ.போ.ச நிறுவனங்களை அவர்கள் நடத்தும் வரை, சர்வதேச அல்லது உள்நாட்டில் நம்பிக்கை இருக்காது, என்றார்.

எனவே, நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்தாமல், அரச தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்காமல், நாட்டை இரத்தக்களரியாக மாற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அடுத்த மாதம் செலுத்தவேண்டிய கடன்தொகை
இலங்கை அடுத்த மாதம் 25ஆம் திகதி 1,000 மில்லியன் டொலர் இறையாண்மை பத்திரங்களில் செலுத்த வேண்டியுள்ளது என்றும், ஏற்கனவே 250 மில்லியன் டொலர் பெறுமதியான நிறுவனம் இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் இந்த வழக்கு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான ஆதரவில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள 43 ஆவது படைப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!