பொருளாதார நெருக்கடியால் உருவாகும் சமூக பிரச்சினைகள்

Kanimoli
2 years ago
பொருளாதார நெருக்கடியால் உருவாகும்  சமூக பிரச்சினைகள்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சமூக ரீதியான பிரச்சினைகள் உருவாகக் கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்களில் பல பேர் பாலியல் தொழிலாளிகளாக மாறக் கூடிய ஆபத்து இருப்பதாக எச்.ஐ.வி.மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

இதனால், பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அறிமுகமாகாத நபர்களுடன் பாதுகாப்பின்றி பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடும் போது பெண்கள் பாலியல் சம்பந்தப்பட்ட பல நோய் தொற்றுக்கு உள்ளாகலாம்.

அந்த பெண்கள் பலருக்கு நோய் தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய் காவிகளாக மாறக்கூடும் எனவும் மருத்துவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!