உடலுக்கு பற்பல நன்மைகளை தரும் மண் குளியல்

Nila
2 years ago
உடலுக்கு பற்பல நன்மைகளை தரும் மண் குளியல்

நவீன மருத்துவ முறைகளைப் போன்று எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நம்முடைய உடலில் இருக்கும் பிரச்சினைகளை வேர் வரைக்கும் சென்று தீர்க்க இந்த மண் சிகிச்சை உதவுகிறது.

பஞ்ச பூதங்களில் முதன்மையானதாகத் கருதப்படும் நிலத்தில் பல தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை நம் உடலை முழுமையாக குணப்படுத்தும் மற்றும் சிறந்த வாழ்க்கை முறையை வழி நடத்த உதவும்.

மாற்று மருத்துவத்தில் மண் சிகிச்சை என்பது பல நோய்களை தீர்க்க பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான சிகிச்சையாகும்.

உலகளவில் மெதுவாகப் பிரபலமடைந்து வரும் இந்த மண் சிகிச்சை பல வழிகளில் உங்களுக்கு உதவும். குறிப்பாக சருமத்தை மென்மையாக்குவது, சருமத்தில் ஏற்படும் தடிப்புகளைப் போக்குதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

மண் சிகிச்சை எப்படி வேலை செய்கிறது?
ஆயுர்வேத மருத்துவத்தின் நம்பிக்கையின் படி, நம்முடைய உடல் ஐந்து அத்தியாவசிய கூறுகளால் ஆனது. பூமி, நீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர். மண், களிமண் (அல்லது பூமி), உடலை உள்ளே இருந்து குணப்படுத்தும் மற்றும் எந்த ஏற்றத்தாழ்வுகளையும் சரிசெய்யும் திறன் கொண்டது.

உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை எதிர்த்துப் போராடும் முக்கியமான தாதுக்கள் இதில் நிறைய உள்ளன. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதால், இது பல நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதோடு, நோய்களையும் குணப்படுத்தும்.

மண் சிகிச்சையின் ஆரோக்கிய நன்மைகள்
உடலில் உள்ள கெட்ட நச்சுக்களையும் கெட்ட நீரையும் உறிஞ்சி நீர்த்துப்போகச் செய்யும் சக்தி வாய்ந்தது மண். குறிப்பாக களிமண்ணுக்கு இந்த ஆற்றல் அதிகமுண்டு.

வயிற்றைச் சுற்றி சேற்றை அடுக்கி வைப்பது, உடலில் செரிமானத்தை மேம்படுத்தவும், இயற்கையாகவே நச்சுத்தன்மையை நீக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது.

மோசமான தலைவலி அல்லது காய்ச்சலை எதிர்த்துப் போராடுகிறது. அடிவயிற்றைச் சுற்றி பிசைந்த ஈரமான களிமண்ணை பயன்படுத்தி வயிற்றுப் பகுதியில் நிரப்பி வைப்பதால், அது உடலின் அதிகபப்டியான வெப்பத்தை எதிர்த்துப் போராடி, உடலை உள்ளே இருந்து குளிர்விக்கும் தன்மை இந்த களிமண்ணுக்கு இருக்கிறது.

காய்ச்சல், நீண்ட நாள் தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பிற மருந்துகளைப் போலல்லாமல், எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் விரைவான நிவாரணம் அளிக்கின்றது

​ஆரோக்கியமான சருமத்துக்கு மண் குளியல்
மண் குளியலின் மூலம் நம்முடைய உடல் முழுவதும் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு, இறந்த செல்களும் நீக்கப்படுகின்றன.

ஆயுர்வேதத்தின் படி, சேறு நச்சுகளை நீக்குகிறது மற்றும் உடலில் பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் மோசமான விளைவுகளை கட்டுப்படுத்துகிறது.

இந்த மண் குளியல் புதிய செல்களை உருவாக்க உதவுவதோடு சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இது மாசுபாட்டின் போது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவும்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மண் குளியல்
இயற்கையில் சேறு குளிர்ச்சியாக இருப்பதால், மன அழுத்தம், தூக்கக் கோளாறுகள், பதட்டம் மற்றும் சியாட்டிகா மற்றும் பிந்தைய மனஉளைச்சல் சீர்குலைவுகள் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைச் சமாளிக்க மாற்று சிகிச்சை என்று சொல்லப்படுகிற ஆயுர்வேத, சித்த மருத்துவர்களால் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

இது உடலின் மேற்பரப்பில் இருந்து கெட்ட நச்சுகளை உறிஞ்சி, மூளையைச் சுற்றியுள்ள தடுக்கப்பட்ட, பதட்டத்தை ஏற்படுத்தும் பாதைகளை அழிப்பதால் மனம் அமைதி அடைகிறது.

​மண் குளியல் கண்களுக்கு நல்லது
நாம் நம்முடைய நாளி்ன் பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட்போன், கம்யூட்டர் திரையின் முன்புதான் செலவிடுகறோம். இரவிலும் நீண்ட நேரம் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் கண்களுக்கு ஓய்வு என்பதே கொடுப்பதில்லை.

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? சேற்றில் கால் வைத்து நடந்தால் கண்கள் புத்துணர்ச்சியாகவும் தெளிவாகவும் இருக்குமாம். அதனால் தான் வயல்வெளிகளில் வேலை பார்த்த நம்முடைய தாத்தா பாட்டிகளுக்கு கண்ணுக்கு கண்ணாடி எதுவும் தேவைப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!