ஜப்பான் இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
#SriLanka
#Japan
#Dollar
Mugunthan Mugunthan
2 years ago
இலங்கை மக்களுக்கு மருந்து மற்றும் உணவுத் தேவைகளை வழங்குவதற்காக யுனிசெப் மற்றும் உலக உணவு திட்டம் (WFP) ஆகியவற்றின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் இன்று (02) வெளியிட்ட அறிக்கையின் ஊடாக, இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் அதன் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்ந நிதியுதவி இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க உதவியாக இருக்கும் என நம்புவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.