நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகள் வழங்கி இந்தியா உதவி

#India
Prasu
4 years ago
நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகள் வழங்கி இந்தியா உதவி

அண்டை நாடான நேபாளத்திற்கு இந்தியா 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக வழங்கி உள்ளது.நேபாள நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவேந்திர பவுடல் முன்னிலையில் இந்தியா தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா வாகனங்களின் சாவிகளை ஒப்படைத்தார். 

சுகாதாரம் மற்றும் கல்வியில் நேபாள உள்கட்டமைப்பை வலுப்படுத்த அந்நாட்டின் முயற்சிகளுக்கு இந்திய அரசு நீண்டகாலத் திட்டத்தின் கீழ் ஆதரவு வழங்கி அளித்து வருகிறது. 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 75 ஆம்புலன்ஸ்கள் பரிசாக வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளி பேருந்துகளை பரிசாக வழங்கப்படுவது இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்தவும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லவும் உதவும் என்றும் ஸ்ரீவஸ்தவா கூறினார். 

அப்போது பேசிய நேபாள அமைச்சர் பவுடல், தங்கள் நாட்டில் இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பாராட்டினார். இந்த முயற்சிகள் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்தியா வழங்கியுள்ள 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி பேருந்துகள் நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் பணிபுரியும் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று இந்திய மிஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4