பாடசாலை போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை

Mayoorikka
2 years ago
பாடசாலை போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்குமாறு கோரிக்கை

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடைமுறை வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி, எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் வழங்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையில் பல சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.