இலங்கை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள்!

Nila
2 years ago
இலங்கை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள்!

இரண்டு டீசல் கப்பல்களில் இருந்து டீசலை தரையிறக்கும் பணி தற்போது நிறைவு பெறவுள்ளதாக அமைச்சர் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், துறைமுகத்தில் உள்ள மேலுமொரு டீசல் கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு குறித்த செய்தியை அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பெட்ரோல் கப்பல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பிரிசோதனை செய்யப்பட்டு வருவதோடு, குறித்த கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் நாளை ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.