புதிய ஜனாதிபதியை ஒரு மாதத்திற்குள் வீட்டுக்கு அனுப்புவோம்: போராட்டக்காரர்கள்

Prathees
2 years ago
புதிய ஜனாதிபதியை ஒரு மாதத்திற்குள் வீட்டுக்கு அனுப்புவோம்: போராட்டக்காரர்கள்

புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்திற்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தை நசுக்க முயல்வதாக தெரிவித்த அவர்கள், படையினருக்கு தாம் பயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

புதிய வடிவில் போராட்டம் தொடர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.