காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் குறித்து அமெரிக்க தூதுவர் கவலை

Nila
2 years ago
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் குறித்து அமெரிக்க தூதுவர் கவலை

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை  குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அதிகாரிகள் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.