உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி

Prathees
2 years ago
உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி

வெல்லவாய, கொட்டவெஹெரகல பிரதேசத்தில் வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது குழந்தையொன்று மின்சாரம் தாக்கி நேற்று (24) பிற்பகல் உயிரிழந்துள்ளது.

மல்வத்தவல வித்தியாலயத்தில் 06ஆம் ஆண்டில் கல்வி பயின்ற ஆர்.எம். நுவன் நெட்சரா என்ற  சிறுவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

உறவினர் வீட்டில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த அவர், அருகில் உள்ள பலாமரத்திற்குச் சென்றபோது, ​​அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி குழந்தை உயிரிழந்தது.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இல்லாததால் தேடியபோது குழந்தையை காணவில்லை என உறவினர் வீட்டு குழந்தை பெற்றோரிடம் கூறியதையடுத்து, தேடிய உறவினர்கள்  மரத்தடியில் விழுந்து கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை வெல்லவாய மரண விசாரணை அதிகாரி எச்.எம்.ஜே. ஹேரத் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பொலிசார் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் குழுவினால் பதிக்கப்பட்டிருந்த கம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.