பெறுமதியான கடத்தல் தங்கத்துடன் 3 பேர் கைது!
Prabha Praneetha
2 years ago
மன்னார் பேசாலை கடற்பரப்பில் நேற்று இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் வலம்புரிச் சங்கு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேசாலை-தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது பேசாலை கடற்கரையில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை பரிசோதித்தபோதே இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்தப் பொருட்களை கடத்த பயன்படுத்திய டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு 9 மில்லியன் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்தனர்.