AL பரீட்சைக்கு விண்ணப்பம் ஒன்லைனில் !

Prabha Praneetha
2 years ago
AL பரீட்சைக்கு விண்ணப்பம் ஒன்லைனில் !

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணைய முறையின் ஊடாக கோரப்படும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை இணைய முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தம் அல்லது தொலைபேசி (DOE) மூலம் மட்டுமே தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலை மாணவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அந்தந்த அதிபர் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

தனியார் விண்ணப்பதாரர்கள் உரிய அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக இந்தப் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.