இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் – பிரதமர் மோடி

Prabha Praneetha
2 years ago
இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் – பிரதமர் மோடி

நம்பகமான நண்பராகவும், நெருங்கிய அண்டை நாடாகவும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்யிலேயே இந்திய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ், மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் விரைவான பொருளாதார மீட்சியை அடைய முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகால பாரம்பரிய உறவுகளின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் தாயார் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.