போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு – விசாரணைகள் ஆரம்பம்!

Mayoorikka
2 years ago
போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு – விசாரணைகள் ஆரம்பம்!

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று, காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹோட்டலில் இருந்து நாளொன்றுக்கு 500 முதல் 600 வரையான உணவுப் பொட்டலங்களை போராட்டக்காரர்கள் பெற்றுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து அண்மைக்காலம் வரை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டதா அல்லது ஏதேனும் அமைப்பினால் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.