சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு விரைவான முன்னேற்றம் ஏற்படும்: ஜப்பான்

Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு விரைவான முன்னேற்றம் ஏற்படும்: ஜப்பான்

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்ப்பதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்கள் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு விரைவான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசிபிக் கொள்கைக்கு ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜப்பானிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.