கோட்டாபய எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை - மகிந்த ராஜபக்ச

Kanimoli
2 years ago
 கோட்டாபய எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை - மகிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – கோட்டாபய ராஜபக்ச ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்?

பதில் - ஓடிப்போனதாக குற்றம் சாட்டுவது யார்?

கேள்வி - மக்கள் தான் அவ்வாறு கூறுகின்றனர்.

பதில் - யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள். வைத்தி பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார்.