பொருளாதார நெருக்கடி:இலங்கைக்கான கடனை நிறுத்தி வைத்துள்ள சீனாவின் எக்சிம் வங்கி

Prathees
2 years ago
பொருளாதார நெருக்கடி:இலங்கைக்கான கடனை நிறுத்தி வைத்துள்ள  சீனாவின் எக்சிம் வங்கி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர்  கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து பணம் விடுவிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதை இடைநிறுத்த இலங்கை தீர்மானித்திருப்பதும் சீனாவின் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனப் பிரஜைகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

திட்டத்தின் கட்டுமானம் செப்டம்பர் 2020 இல் தொடங்கியது மற்றும் 2024 இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சுமார் 33 பில்லியன் ரூபா மூலம் இதுவரை சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.