அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 450 மெற்றிக்தொன் எரிபொருள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது

Kanimoli
2 years ago
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 450 மெற்றிக்தொன் எரிபொருள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 450 மெற்றிக்தொன் எரிபொருள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடற்படை நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக நன்கொடையாக எரிபொருள் வழங்கப்பட்டதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை விமானப்படைக்கும் அவுஸ்ரேலியாவினால் 27 ஆயிரம் லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஜெட் விமானங்களின் பயன்பாட்டிற்காக எரிபொருள் வழங்கப்பட்டதாக விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க கூறினார்.