விசா காலத்தை நீடிக்க முன்னாள் ஜனாதிபதி சிங்கபூரிடம் கோரிக்கை

Prabha Praneetha
3 years ago
விசா காலத்தை நீடிக்க முன்னாள் ஜனாதிபதி சிங்கபூரிடம் கோரிக்கை

சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா விசா காலம் முடிவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இருந்து மேலும் 14 நாட்கள் நீடிப்பை கடந்த மாதம் 27ஆம் திகதி பெற்றுக்கொண்டார்.

இந்த நீடிப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில் விசாவை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்க சிங்கப்பூர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ தலையீடு இருக்காது என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் தங்கியிருப்பது தொடர்பில் இலங்கை பிரதமர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4