மாகாண சபைகளின் முன்னாள் தவிசாளர்களுக்கு மாதாந்தம் 1800 லீற்றர் எரிபொருள்

Prathees
2 years ago
மாகாண சபைகளின் முன்னாள் தவிசாளர்களுக்கு மாதாந்தம் 1800 லீற்றர் எரிபொருள்

செயலிழந்த மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கு மாதாந்தம் மூன்று வாகனங்களுக்கு தலா 1800 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுவதாக  தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி சகல மாகாண சபைகளின் தவிசாளர்களும் மாதாந்தம் ஏழு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவிட வேண்டியுள்ளதாக கணக்காய்வாளர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மாகாண சபைத் தவிசாளர்களின் பத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதுடன்இ நான்கு பேருக்கு மாதாந்தம் வாகனம் ஒன்றிற்கு 240 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது.

தற்போது மாகாண சபைகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில்இ இவர்கள் குறிப்பிடத்தக்க கடமைகளை செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.