சிறிலங்கா நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகவுள்ளதாகத் தகவல்

Kanimoli
2 years ago
சிறிலங்கா நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் ரஞ்சன்  ராமநாயக்க விடுதலையாகவுள்ளதாகத் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் ரஞ்சன்  ராமநாயக்க விடுதலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை விடுதலை செய்வது தொடர்பான அனைத்து பரிந்துரைகளையும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க அதிபரின் பொதுமன்னிப்பின் கீழ் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, குற்றம் தொடர்பான மன்னிப்புக் கடிதத்தில் அண்மையில் கையொப்பமிட்டார்.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சிகள், கலைஞர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.